மணல் கடத்தலை தட்டிக்கேட்ட காவல் உதவி ஆய்வாளர் டிராக்டர் ஏற்றி படுகொலை.!



MP Shehdol ASI Mahendra Killed


மத்திய பிரதேசம் மாநிலம், ஷெத்டோல் மாவட்ட காவல்துறையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மஹேந்திர பாக்ரி. இவர் இன்று காவலர்கள் பிரசாந்த் கனோஜி, சஞ்சய் துபே ஆகியோருடன் மணல் கொள்ளை தொடர்பாக வந்த புகார் குறித்து விசாரிக்க சென்றார்.

நிகழ்விடத்தில் மணல் கொள்ளை நடந்தது உறுதியான காரணத்தால் எஸ்எஸ்ஐ பாக்ரி மணல் கடத்தல் கும்பலை காரில் இருந்து இறங்கி சென்று எச்சரித்து இருக்கிறார். அப்போது அசராத கும்பல், காவல் உதவி ஆய்வாளரை டிராக்டர் ஏற்றிக்கொலை செய்து தப்பி சென்றது. 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து நிகழ்விடம் விரைந்த காவல்துறையினர், பாக்ரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியை கண்டறிய ரூ.30 ஆயிரம் சன்மானம் அறிவித்து இருக்கின்றனர்.