மொட்டை மாடியில் நின்று உதவி கேட்ட தமிழ் நடிகர்.. வெள்ளத்தில் சிக்கித்தவித்ததால் ஓடோடி சென்று படகில் மீட்பு.!!
வெள்ளத்தில் சிக்கி., மொட்டை மாடியில் நின்று உதவி கேட்ட தமிழ் நடிகர்.. ஓடோடி சென்று படகில் மீட்பு.!!
மிக்ஜாம் புயலின் காரணமாக தலைநகர் சென்னையானது வெள்ளத்தில் தத்தளித்து தற்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. பல இடங்களில் போர்க்கால அடிப்படையில் மழை நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது வீட்டை சூழ்ந்துள்ள வெள்ள நீர் பாதிப்பை X தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். மேலும் காரம்பாக்கம் பகுதியில் இருக்கும் தனது வீட்டிற்குள் நீர் புகுந்து விட்டதாகவும், உதவிக்கு அதிகாரிகளை அழைத்துள்ளதாகவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
செல்போனில் சிக்னல் இல்லாமல் வீட்டின் மாடியில் சிக்னல் கிடைப்பதால் அங்கு வந்து உதவிக்கு அழைத்ததாகவும், சென்னை மக்களின் நிலையை தன்னால் உணர முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தகவலறிந்த மீட்பு படையினர் உடனடியாக காரப்பாக்கம் சென்று அவரை மீட்டுள்ளனர். அத்துடன் நடிகர் விஷ்ணு விஷால் அவரை மீட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து X தளத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.