நடிகை கௌதமியிடம் மோசடி செய்த புகார் விவகாரம்; குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு.!
நடிகை கௌதமியிடம் மோசடி செய்த புகார் விவகாரம்; குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு.!
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் கௌதமி. இவர் சமீபத்தில் காவல் ஆணையர் அலுவலகத்தில், தன்னிடம் நம்பிக்கைக்குரிய உதவியாளராக பணியாற்றிய அழகப்பன் என்பவர் அவரின் குடும்பத்துடன் சேர்த்து ஏமாற்றி இருக்கிறார்.
எனது பெயரில் உள்ள நிலங்களை முறைகேடான ஆவணங்களை பயன்படுத்தி பெயர்மாற்றம் செய்துள்ளார். இவ்வாறாக சிறுகச்சிறுக ரூ.20 கோடி வரை பல மோசடிகள் நடந்துள்ளது. இதனை நான் கேட்டபோது கொலை மிரட்டல் விடுகிறார் என தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து, புகாரை ஏற்ற காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மோசடி நடைபெற்றது அம்பலமாகவே, காவல் துறையினர் அழகப்பன் மற்றும் அவரின் குடும்பத்தை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.