×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொடர் தொந்தரவால் பாக்யாவிடம் கோரிக்கை வைத்த கோபி.. அடுத்த வாரம் நடக்கபோவது என்ன?.. ப்ரோமோ வைரல்.!

தொடர் தொந்தரவால் பாக்யாவிடம் கோரிக்கை வைத்த கோபி.. அடுத்த வாரம் நடக்கபோவது என்ன?.. ப்ரோமோ வைரல்.!

Advertisement

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி நெடுந்தொடரில் ரேஷ்மா, மேகாமேனன், விஜே விஷால், கே எஸ் சுசித்ரா செட்டி, சதீஷ்குமார், நந்திதா ஜெனிபர், மீனா செல்லமுத்து உட்பட பலரும் நடித்து வருகின்றனர். 

இத்தொடரில் இரண்டாவது திருமணம் செய்த கோபி, தற்போது தனது மனைவி ராதிகாவுடன் மகிழ்ச்சியாக வாழ்வதன் பேரில் ராதிகா கர்ப்பமாக இருக்கிறார். இதனால் குடும்பம் இரண்டாக உடைந்து, ராதிகா மற்றும் கோபி தங்களது பழைய வீட்டிற்கு திரும்பிய நிலையில், அவர்களுடன் கோபியின் அம்மா ஈஸ்வரியும் சென்று விட்டார். 

இதையும் படிங்க: நடுரோட்டில் மைனா நந்தினியின் கணவருடன் இருவர் கைகலப்பு.. இறுதியில் வெளியான உண்மை.!! 

ஈஸ்வரியை வீட்டுக்கு அழைத்துச்செல்ல கோரிக்கை வைக்கும் கோபி

அங்கு அவர் தினமும் ருசியான சாப்பாடு கிடைக்காமல், நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வருகிறார். மகனுக்காக அங்கு இருப்பதாகவும் கூறுகிறார். இதனிடையே மாமியார் - மருமகள், மருமகளின் அம்மாவுடன் ஈஸ்வரி இடையே ஏற்படும் பிரச்சனை காரணமாக, மனமுடைந்த போன கோபி பாக்யாவை நேரில் பார்த்து அம்மாவை மீண்டும் அழைத்துச் செல்ல கோரிக்கை வைக்கிறார். 

இதன் பெயரில் பாக்கியலட்சுமி கோவிலுக்கு சென்று தனது மாமியாருக்கு உணவு சமைத்துக் கொடுத்து, தனது வீட்டிற்கு வருமாறு கோரிக்கை வைக்கிறார். நல்ல சாப்பாடு சாப்பிட்டு ஈஸ்வரி மகிழ்ந்தாலும், தனது மகன் வருத்தப்படுவான் என்று கூறி அவர் அதனை தட்டிக் கழிக்கிறார். இதனால் அடுத்த வாரம் ஈஸ்வரி வீட்டிற்கு திரும்புவாரா? அல்லது மாமியார் மருமகள் சண்டை தொடருமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கான பிரமோ தற்போது வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: பிரியங்காவுக்கு விரைவில் இரண்டாவது திருமணமா?.. தாயின் ஆசைதான் காரணமாம்.!! கசிந்த தகவல்..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay tv #Baakiyalakshmi Promo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story