×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்.. 38 வயதில் காதலரை கரம்பிடித்த பிரபல சீரியல் நடிகை வெளியிட்ட குட்நியூஸ்.! வைரலாகும் கியூட் புகைப்படம்!!

வாவ்.. 38 வயதில் காதலரை கரம்பிடித்த பிரபல சீரியல் நடிகை வெளியிட்ட குட்நியூஸ்.! வைரலாகும் கியூட் புகைப்படம்!!

Advertisement

தமிழில் மனசெல்லாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் சந்திரா. அதனை தொடர்ந்து அவர் ஏப்ரல் மாதத்தில், தில்லாலங்கடி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். நடிகை சந்திரா கடந்த 2007 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான காதலிக்க நேரமில்லை சீரியலில் பிரஜின் உடன் இணைந்து நடித்ததன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்த அவர் விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியிலும் போட்டியாளராகவும் கலந்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு நடிகை சந்திரா தனது 38 வயதில் தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்த டோஷ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

டோஷ் மற்றும் சந்திரா இருவரும் ஸ்வந்தம் சுஜாதா என்ற மலையாள சீரியலில்  இணைந்து நடித்துள்ளனர்.  இந்த நிலையில் சந்திரா தற்போது கர்ப்பமாக உள்ளார். அந்த செய்தியை அவர்கள், இருவரும் ஜூனியருக்காக காத்திருப்பதாக கூறி பகிர்ந்துள்ளனர். மேலும் வளைகாப்பு விழா நடந்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர். அது வைரலான நிலையில் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Chandra #Kadhalikka neramillai #pregnant
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story