×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

போதை நாகராஜனை பதம்பார்த்த ஒரிஜினல் நாகராஜன்; குடிபோதையில் நடந்த சண்டை.. உயிருக்கு போராடும் நபர்.!

போதை நாகராஜனை பதம்பார்த்த ஒரிஜினல் நாகராஜன்; குடிபோதையில் நடந்த சண்டை.. உயிருக்கு போராடும் நபர்.!

Advertisement

 

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சத்யசாய் மாவட்டம், கத்ரி பகுதியில் வசித்து வருபவர் நாகராஜன். இவர் சம்பவத்தன்று மதுபோதையில் அங்குள்ள கல்லூரி ஒன்றின் வளாகத்தை ஒட்டியுள்ள பகுதிக்கு சென்றுள்ளார். அச்சமயம் அங்கு நல்ல பாம்பு போன்று சாலையோரம் இருந்துள்ளது. 

தீண்டிய பாம்பு

இதனைக்கண்ட நாகராஜன், பாம்பை பிடித்து அதனுடன் வம்பு வைத்துக்கொண்டார். மேலும், போதையில் தான் என்ன செய்கிறோம் என்ற உணர் இன்றி, பாம்பை பலமுறை பிடித்து விளையாட, ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பாம்பு அவரை தீண்டியது. 

இதையும் படிங்க: ஆணுறுப்பில் கடித்த பாம்பு; வாயில் நுரைதள்ளி, உடல் நீலநிறமாகி 15 வயது சிறுவன் பலி.!

மருத்துவமனையில் அனுமதி

அக்கம் பக்கத்தினர் என அங்கிருந்தவர்கள் பலரும் நாகராஜனை எச்சரித்தும் பலனில்லை. போதை நாகராஜனை உண்மையான நாகராஜன் தீண்டவே, மருத்துவமனையில் அவர் அனுமதி செய்யப்பட்டார். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் நாகராஜன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: மோட்டார் அருகே அலட்சியமாக நிற்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்?.. உங்களுக்குத்தான் இந்த பதறவைக்கும் வீடியோ.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Snake bite #Andhra Pradesh #ஆந்திரப்பிரதேசம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story