×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோவில் புளியோதரை பிரசாதத்தில் இறைச்சி எலும்புத்துண்டுகள்; பக்தர்கள் அதிர்ச்சி.!

கோவில் புளியோதரை பிரசாதத்தில் இறைச்சி எலும்புத்துண்டுகள்; பக்தர்கள் அதிர்ச்சி.!

Advertisement

 

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் நகரில் பிரம்மராம்பா மல்லிகார்ஜுன ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த கே. வேணுகோபால் என்பவர் இன்று சாமி கும்பிட சென்றிருந்தார். 

சாமி தரிசனத்திற்கு பின்னர் கோவில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில், புளியோதரை பிரசாதமாக வழங்கப்பட்டு இருக்கிறது. அச்சமயம், வேணுகோபால் பிரசாதம் சாப்பிட்டபோது, வாயில் குச்சி போன்ற ஒன்று அகப்பட்டுள்ளது.

அதனை கையில் எடுத்துப்பார்த்தபோது இறைச்சியின் எலும்பு துண்டுகள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, சம்பவத்தை வீடியோ எடுத்தவர், கோவில் நிர்வாகத்திடமும் எழுத்துபூர்வமான புகார் வழங்கி வந்துள்ளார். தற்போது இதுகுறித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றன.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Andhra Pradesh #India #temple
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story