×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இரண்டு பேருந்துக்கு நடுவே சிக்கி இளைஞர் பரிதாப பலி; போதை ஓட்டுனரால் நடந்த சோகம்.. கோவையில் துயரம்.!

இரண்டு பேருந்துக்கு நடுவே சிக்கி இளைஞர் பரிதாப பலி; போதை ஓட்டுனரால் நடந்த சோகம்.. கோவையில் துயரம்.!

Advertisement

 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் பேருந்து நிலையத்தில், பேருந்து ஓட்டுநர் ஒருவர் பேருந்தை பின்னோக்கி எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி இயக்கி இருக்கிறார். இந்த பேருந்துக்கு பின்னால் ஒரு பேருந்து இருந்துள்ளது. 

இளைஞர் உடல் நசுங்கி பலி: 

இந்நிலையில், இரண்டு பேருந்துக்கு நடுவே இருந்த இளைஞரின் மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில், இளைஞர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: கூகுள் மேப்பை பார்த்து, 7 பேரின் உயிரோடு விளையாடிய பெண்.! சென்னையில் விபரீதம்.!

போதையில் இருந்த ஓட்டுனரால் சோகம்

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவர் மதுபோதையில் இருந்ததே விபத்திற்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது. விபத்தில் பலியான நபர் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனரை பொதுமக்கள் மற்றும் விபத்தில் தொடர்பு இல்லாத மற்றொரு பேருந்தின் நடத்துனர் ஆகியோர் ஆத்திரத்தில் தாக்கிய காட்சிகளும் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: அதிகாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு - ஆம்னி பேருந்து மோதி விபத்து; 24 பேர் காயம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #tamilnadu #Coimbatore #Gandhipuram
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story