×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

லாரி மீது டூவீலர் மோதி பயங்கர விபத்து; தலை பிளந்து, மூளை சிதறி 3 இளைஞர்கள் பலி.! அதிவேகத்தில் சோகம்.!

லாரி மீது டூவீலர் மோதி பயங்கர விபத்து; தலை பிளந்து, மூளை சிதறி 3 இளைஞர்கள் பலி.! அதிவேகத்தில் சோகம்.!

Advertisement


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கன்னம் மாவட்டம், சாத்துப்பள்ளி மண்டல், பி. கங்காராம் கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், இன்று இருசக்கர வாகனத்தில் 3 இளைஞர்கள் பயணம் செய்தனர். 

அப்போது, சாலையோரம் லாரி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக பயணம் செய்த இளைஞர்கள், சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரியை சரிவர கவனிக்கவில்லை. 

அவர்களின் முன்னால் இருசக்கர வாகனங்களும் சென்று கொண்டு இருந்த நிலையில், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறிய வாகனம், நிறுத்தப்பட்டு இருந்த லாரியின் பின்புறம் பலமாக மோதியது. 

இதையும் படிங்க: அதிகாலையில் நடந்த கோரவிபத்து.! துடிதுடித்து பரிதாபமாக பறிபோன 18 உயிர்கள்.! பகீர் சம்பவம்!!

நொடியில் 3 உயிர்கள் பலி

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பெட்டி சுரேஷ் (வயது 22), முடின்னா வேணு (வயது 19), கரீமுல்லாஹ் (வயது 11) ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இவர்களில் சுரேஷ் மற்றும் வேணுவின் தலை லாரியின் பின்பக்கம் பலமாக மோதியதால், அவர்களின் தலை பிளந்து மூளை வெளியே சிதறி பரிதாபமாக துள்ளத்துடிக்க மரணம் ஏற்பட்டது. இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இந்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: காதலிக்கு கிப்ட் வாங்க ஏடிஎம்மில் நூதன திருட்டு; சிறார்களின் அதிர்ச்சி செயல்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #Telangana #Lorry Bike Crash #India
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story