×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதல் விவகாரத்தில் பயங்கரம்; இளைஞர் கழுத்தறுத்து படுகொலை.!

காதல் விவகாரத்தில் பயங்கரம்; இளைஞர் கழுத்தறுத்து படுகொலை.!

Advertisement

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பேகம்பேட், பட்டிக்கட்டா பகுதியில் வசித்து வருபவர் முகமது உஸ்மான் (22). இவர் அப்பகுதியில் வசித்து வந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளனர். 

இந்த விஷயம் பெண்ணின் மைத்துனரான அஜாஜ் என்பவருக்கு தெரியவந்து, அவர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனிடையே, கடந்த ஜூன் 25 அன்று அஜாஜ் தனது நண்பர்கள் மூவருடன் உஸ்மானை கடுமையாக தாக்கி இருக்கிறார். 

இதையும் படிங்க: துண்டு துண்டாக வெட்டி ரயில்களில் வீசப்பட்ட பெண்.! முதியவரின் வெறிச்செயல்.! திடுக் சம்பவம்!!

கழுத்து அறுத்துக்கொலை

பின் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற கும்பல், உஸ்மானின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து தப்பி சென்றது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், உஸ்மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அஜாஜ் மற்றும் அவரின் நண்பர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது. 

இதையும் படிங்க: 37 வயது பெண்ணை இரண்டு துண்டாக வெட்டிக்கொன்ற 60 வயது கிழவன்; பலாத்காரம் நிறைவேறாததால் கொடூரம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Murder #Love #Telangana #India
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story