×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கை-கால்களை துண்டாக்கி, 17 வயது மகளை கண்டந்துண்டமாக வெட்டிக்கொன்ற தந்தை; அதிரவைக்கும் காரணம்.!

கை-கால்களை துண்டாக்கி, 17 வயது மகளை கண்டந்துண்டமாக வெட்டிக்கொன்ற தந்தை; அதிரவைக்கும் காரணம்.!

Advertisement

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில் வசித்து வருபவர் நயீம் கான். இவருக்கு திருமணம் முடிந்து, மனைவி 17 வயது மகள் ஆகியோர் இருக்கின்றனர். 

நயீமின் 17 வயது மகள், அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் விருப்பம் இல்லாத நயீம், மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: காதல் திருமண விவகாரத்தில் மச்சான் கொடூர கொலை; பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் பகீர் சம்பவம்.! 

இந்நிலையில், நயீமின் மகள் தனது காதலருடன் ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. மகளை தேடி கண்டுபிடித்த தந்தை, நடுரோட்டில் வைத்து அவரை கண்டம்துண்டமாக வெட்டிப்படுகொலை செய்தார். 

மகளின் கை, கால்களை துண்டு-துண்டாக கோடரி கொண்டு வெட்டிக்கொலை செய்த தந்தை, மகளின் உடல் அருகே அமர்ந்துகொண்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், சிறுமியின் தந்தையை கைது செய்தனர். விசாரணையில், மகளின் காதல் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். 

இதையும் படிங்க: ஆசை வார்த்தை கூறி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Murder #Uttar pradesh #India
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story