திருமணமான 5 நாளில் புதுமணப்பெண் மாயம்.. டீயில் தூக்க மருந்து கலந்துகொடுத்து நகை, பணத்துடன் ஓட்டம்.!
திருமணமான 5 நாளில் புதுமணப்பெண் மாயம்.. டீயில் தூக்க மருந்து கலந்துகொடுத்து நகை, பணத்துடன் ஓட்டம்.!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோண்டா மாவட்டம், பிசோலி கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருணம் முடிந்தது.
திருமணம் முடிந்த 5 வது நாளில், புதுமணப்பெண் தனது கணவர், மாமனார், மாமியார் ஆகியோருக்கு டீ கொடுத்தார். இதனை குடித்த அனைவரும் உறங்கி இருக்கின்றனர்.
புதுமணப்பெண் மாயம்
பின் மறுநாள் காலையில் கண்விழித்து பார்க்கையில், புதுமணப்பெண் வீட்டில் இருந்து மாயமாகியது தெரியவந்தது. மேலும், வீட்டில் இருந்த ரூ.3.15 இலட்சம் பணம், தங்கம், வெள்ளி நகைகள் மாயமாகியது தெஇர்யவந்தது.
இதையும் படிங்க: திருமணமான மறுநாளே குழந்தை பிறந்த அதிசயம்.. உறவினர்களுக்கு பேரதிர்ச்சி.!
சுமார் ரூ.5 இலட்சம் மதிப்புள்ள நகையுடன் பெண் மாயமானார். இதனால் அதிர்ந்துபோன மாப்பிள்ளை மற்றும் அவரின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், புதுமணப்பெண்ணை மணமகன் வீட்டாரும் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பூனைக்காக உயிரையே கொடுத்த பெண்மணி.! 3 நாட்கள் பிணத்துடன் இருந்த சம்பவம்.!