×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: அப்படிப்போடு.. வங்கக்கடலில் உருவாகிறது புயல்; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

#Breaking: அப்படிப்போடு.. வங்கக்கடலில் உருவாகிறது புயல்; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

Advertisement

 

அக்.24 அன்று மேற்குவங்கம் - ஒடிசா இடையே புயல் ஒன்று கரையை கடக்கிறது. 

வங்கக்கடல் பகுதியில் வரும் 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அது வலுபெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் புயல் உருவாகுவதை உறுதி செய்துள்ளது. இந்த புயலின் நகர்வு வடமேற்கு திசையில் இருக்கிறது. 

இதையும் படிங்க: Video: தலைமுடியை பிடித்து, உருண்டு அடித்துக்கொண்ட மாணவிகள்.. அலேக்காக தூக்கிய பெரியக்கா.. பகீர் வீடியோ.!

ஒடிசா-மேற்குவங்கத்தில் கரையை கடக்கும்

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக வலுப்பெற்று மேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒடிசா - மேற்கு வங்கம் இடையே அக்.24 அன்று புயல் கரையை கடக்கிறது. 

தமிழ்நாட்டுக்கு பாதிப்பில்லை

இதனால் தமிழ்நாட்டுக்கு எந்த விதமான பகுதியும் இல்லை. வரும் 24 மணிநேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதியிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்.22ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அக்.23 அன்று புயலாக உருவாகி, அக்.24 அன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இதையும் படிங்க: வீட்டில் கொள்ளை, இளம்பெண் பலாத்காரம்.. குழந்தையை கொள்வதாக மிரட்டி துயரம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rain #cyclone #odisha #west bengal
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story