×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செல்போனுக்காக நடந்த பயங்கரம்; தம்பியை சுத்தியலால் அடித்தே கொலை செய்த 18 வயது அண்ணன்.!

செல்போனுக்காக நடந்த பயங்கரம்; தம்பியை சுத்தியலால் அடித்தே கொலை செய்த 18 வயது அண்ணன்.!

Advertisement

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பகுதியில் வசித்து வருபவர் சிவகுமார் (வயது 18), இவரின் சொந்த சகோதரர் ப்ரனேஷ். சம்பவத்தன்று பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில், பிரனேஷ் நீண்ட நேரமாக சிவகுமாரின் செல்போனை வாங்கி வீடியோ கேம் விளையாடியதாக தெரிய வருகிறது. 

செல்போனுக்காக நடந்த சோகம்

இதனைக்கண்ட சிவகுமார், தனது சகோதரரை பலமுறை கண்டித்து செல்போனை கொடுக்குமாறு எச்சரித்து இருக்கிறார். கேமில் ஆர்வமாக இருந்த பிரனேஷ், செல்போனை தர மறுத்திருக்கிறார். இதனால் சகோதரர்களிடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், ஆத்திரமடைந்த சிவக்குமார் வீட்டில் இருந்த கத்தரியை எடுத்து வந்து தம்பியை சரமாரியாக தாக்கி இருக்கிறார். 

இதையும் படிங்க: பார்க்கிங் தகராறில் 31 வயது ஐடி மேனேஜர் கார் ஏற்றிக்கொலை; பார்க்கிங் பட பாணியில் படுபயங்கர சம்பவம்.!

சகோதரர் கொலை

இந்த சம்பவத்தில் நிலைகுலைந்து விழுந்த பிரனேஷ், நிகழ்விடுத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காதலருடன் உல்லாசமாக இருந்த அத்தை; நேரில் பார்த்த 5 வயது சிறுமி கொடூர கொலை..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Murder #karnataka #Mobile addict #கர்நாடகா #Mobile game #Latest news #Crime news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story