×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

20,000 ரூபாய்க்கு... கதற கதற கொலை செய்யப்பட்ட தாய்.!! மகன் உட்பட 3 பேர் கைது.!!

20,000 ரூபாய்க்கு... கதற கதற கொலை செய்யப்பட்ட தாய்.!! மகன் உட்பட 3 பேர் கைது.!!

Advertisement

உத்திரபிரதேச மாநிலத்தின் காசியாபாத் நகரைச் சேர்ந்த 26 வயது இளைஞன் தனது தாயை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் இறந்த பெண்ணின் மகன் உட்பட 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஊர் சுற்றி திரிந்த மகன்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசியாபாத் நகரில் உள்ள மண்டோலா கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில் தியாகி. இவருக்கு திருமணமாகி சங்கீதா தியாகி என்ற மனைவியும் மனிஷ் தியாகி மற்றும் மோகித் தியாகி என்ற மகன்களும் இருந்தனர். சுனில் தியாகி ஒரு நபரின் இடத்திற்கு பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சங்கீதா  அப்பகுதியில் உள்ள நூல் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதியினரின் முதல் மகனான மனிஷ் தியாகி டெல்லியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்ததோடு தனது மனைவியுடன் தங்கி இருக்கிறார். கடைசி மகனான மோகித் தியாகி எந்த வேலைக்கும் செல்லாமல் மது அருந்திவிட்டு ஊர் சுற்றி இருக்கிறார்.

20,000 ரூபாய் பணம் கொடுக்க மறுத்த தாய்

மோகித் தியாகி தனது டிஜே கருவி பழுதாகிவிட்டது அதனை சரி பார்க்க வேண்டும் என தாயிடம் 20,000 கேட்டிருக்கிறார். இந்தப் பணத்தை கொடுக்க மறுத்த சங்கீதா தனது மகனை கடுமையாக திட்டியதாக தெரிகிறது. வேலை வெட்டிக்கு செல்லாமல் தன்னுடைய உழைப்பில் மது அருந்திவிட்டு ஊர் சுற்றுவதாக மகனை கண்டித்து இருக்கிறார் சங்கீதா. இதனால் ஆத்திரமடைந்த மோகித் தனது தாயை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: பீர் பாட்டிலில் கிடந்த பல்லி; குடிமகனுக்கு பேரதிர்ச்சி.! 

நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் போட்டு கொலை

இந்நிலையில் மகா சிவராத்திரி பூஜைக்கு சென்று வந்த மோகித் மறுநாள் தனது நண்பர்களான சச்சின் தியாகி மற்றும் வால்மீகி ஆகியோருடன் அமர்ந்து மது அருந்தி இருக்கிறார். அப்போது தனது தாயால் ஏற்பட்ட அவமானம் குறித்தும் அவரை கொலை செய்ய முடிவு செய்திருப்பது குறித்தும் பகிர்ந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது நண்பர்களும் தாயை கொலை செய்ய உதவுவதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தாய் வேலை செய்யும் இடத்திற்கு சென்ற மோஹித் அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்திருக்கிறார். அப்போது அங்கு காத்திருந்த அவரது நண்பர்களான வால்மீகி மற்றும் சச்சின் ஆகியோர் மோகித்தின் தாய் சங்கீதாவின் முகத்தில் செங்கலால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தகவலறிந்த காவல்துறை இறந்த சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியது. 20,000 ரூபாய் காக தாய் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: "என் பேச்சை மீறி கள்ள உறவு கேக்குதோ.." மனைவி கொடூர படுகொலை.!! சரணடைந்த கணவன்.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #UttarPradesh #Ghaziabad #Crime #Son Killed Mother
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story