×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தலையணையை வைத்து அழுத்தி... கள்ள உறவுக்கு இடையூறு... 4 வயது மகளை... தாய் செய்த கொடுமை!

தலையணையை வைத்து அழுத்தி... கள்ள உறவுக்கு இடையூறு... 4 வயது மகளை... தாய் செய்த கொடுமை!

Advertisement

ஹைதராபாத்தில் சேர்ந்த பெண் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் நான்கு வயது மகளை கொடூரமாக கொலை செய்து சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை செய்த காவல்துறையினர் அந்தப் பெண்மணியை கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத் சேர்ந்த கல்யாணி என்ற பெண்ணுக்கு திருமணமாகி தன்விதா என்ற நான்கு வயது மகள் இருந்தார். கணவருடன் ஏற்பட்ட தகராறு தொடர்ந்து  தனது 4 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார் கல்யாணி. இந்நிலையில் அவருக்கும் அவரது உறவுக்காரரான பத்தொன்பது வயது நவீன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டிருக்கிறது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதற்கு அவரது நான்கு வயது மகள் இடையூறாக இருந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து தனது 4 வயது மகளை தலையணையை வைத்து அழுத்தி  கொடூரமாக கொலை செய்திருக்கிறார்  கல்யாணி.

குழந்தையை காணவில்லை என்று அந்தப் பெண்மணியின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணையில் சிறுமி  கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கல்யாணியை கைது செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Hyderabad #childmurder #ema #motherarrested
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story