தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கருணாஸ் பட நடிகைக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்.! மும்பை கோர்ட்டு உத்தரவு.! என்ன நடந்தது??

கருணாஸ் பட நடிகைக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்.! மும்பை கோர்ட்டு உத்தரவு.! என்ன நடந்தது??

Non bailable warrant issued by mumbai court against navneeth rana Advertisement

தமிழ் சினிமாவில் கருணாஸ் நடிப்பில் வெளிவந்த அம்பாசமுத்திரம் அம்பானி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நவ்நீத் ரானா. இவர் மராட்டிய மாநிலம் அமராவதி தொகுதியில் சுயேச்சை எம்.பி.யாக உள்ளார். தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியில் போட்டியிடுவதற்காக அவர் போலிச் சான்றிதழை பெற்றதாக மும்பை முல்லுண்டி காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற விசாரணையில் நவ்நீத் ரானா மற்றும் அவரது தந்தை கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. அப்பொழுது போலீசார் நவ்நீத் ரானாவுக்கு எதிராக பிடிவாரண்ட்டை செயல்படுத்த கூடுதல் அவகாசம் வேண்டும் என கேட்டுள்ளனர்.

Navneeth

இதனை மாஜிஸ்திரேட்டு மோகாஷி நிராகரித்துள்ளார் . மேலும் 
 நவ்நீத் ரானா மற்றும் அவரது தந்தைக்கு எதிராக ஜாமீனிலும் வெளியே வர முடியாத புதிய பிடிவாரண்டை பிறப்பித்தார். மேலும் இதனை உடனே செயல்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை வரும் 28ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Navneeth #Warrant #Mumbai court
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story