×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மூடநம்பிக்கையின் உச்சம்... பிஞ்சி விரல்களை கொதிக்கும் எண்ணெயில் முக்கி எடுத்த பெற்றோர்.!

மூடநம்பிக்கையின் உச்சம்... பிஞ்சி விரல்களை கொதிக்கும் எண்ணெயில் முக்கி எடுத்த பெற்றோர்.!

Advertisement

உத்திரபிரதேசம் மாநிலத்தில்  பிஞ்சு குழந்தையின் கைகளை கொதிக்கும் எண்ணெயில் முக்கி எடுத்த சம்பவம்  அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த குழந்தையின் பெற்றோரிடம்  காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

உத்திர பிரதேசம் மாநிலம் பாராபங்கி  மாவட்டத்தைச் சார்ந்த பதேபூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அந்த கிராமத்தைச் சார்ந்த இர்பான் மற்றும் ஆசிபா பானு தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. அந்த குழந்தை பிறந்தது முதல் சரியாக பால் குடிக்கவில்லை.

இதன் காரணமாக அவர்களது மூடநம்பிக்கையின் படி குழந்தையின் கைகளை  கொதிக்கும் எண்ணெயில்  முக்கி எடுத்து இருக்கின்றனர். தாங்கள் கவலையில் இருந்ததால் அவ்வாறு செய்ததாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக குழந்தையின் பிஞ்சி கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.  எவ்வளவுதான் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் முன்னேறினாலும் இன்னும் இது போன்ற மூடநம்பிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #UttarPradesh #superstition #babyfingerdipped #policeenquiry
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story