தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

2022 ஐபிஎல் தொடர்: பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டா.? வெளியான புதிய தகவல்.!

2022 ஐபிஎல் தொடர்: பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டா.? வெளியான புதிய தகவல்.!

fans allowed for 2022 ipl Advertisement

2022 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கவுள்ளது. 15-வது ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் புதிதாக களமிறங்குவதால் 10 அணிகள் ஆடவுள்ளதால் இந்த சீசன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை காரணமாக இந்த சீசனின் லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நான்கு மைதானங்களில் மட்டுமே நடைபெற உள்ளன. மும்பையில் உள்ள வான்கடே மைதானம், பிரபோர்ன் (Brabourne) மைதானம், நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானம் மற்றும் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது.

ஐபிஎல் தொடரின் ஆரம்பக்கட்டத்தில் 25 சதவிகித பார்வையாளர்களையும், போகப்போக கூடுதல் பார்வையாளர்களையும் அனுமதிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிகளை நேரில் பார்ப்பதற்கு ரசிகர்கள் உச்சக்கட்ட ஆர்வத்தில் உள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#IPL 2022
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story