×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தல தோனி எவ்ளோ வருஷத்துக்கு பிறகு ஐபில் போட்டியில் ஆடவில்லை தெரியுமா?

ipl 2019 - csk - thala dhoni - after 9years - match rest

Advertisement

2019 ஐபிஎல் தொடரின் 44ஆவது ஆட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி, ஜடேஜா மற்றும் டூ ப்ளஸிஸ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. இதனால் நேற்றைய போட்டிக்கு சென்னை அணியின் கேப்டனானக சுரேஷ் ரெய்னா தலைமையேற்றார்.

இதில் ‘டாஸ்’ வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ரெய்னா முதலில் ‘பீல்டிங்’ தேர்வு’ செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணிக்கு ரோகித் சர்மா (67) அரைசதம் அடித்து கைகொடுக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது.

 

எட்டக்கூடிய இலக்கை துரத்திய சென்னை அணிக்கு வாட்சன் (8), ரெய்னா (2), ராயுடு (0), ஜாதவ் (6) என ‘டாப்-ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். அடுத்து வந்த வீரர்களில் முரளி விஜய் (38), பிராவோ (20), சாண்ட்னர் (22) ஆகியோரைத் தவிர யாரும் சிறப்பாக ஆடவில்லை. 

இதனால் சென்னை அணி 17.4 ஓவரில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 14 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது. நேற்றைய போட்டியில் தோற்றாலும் சென்னை அணி ‘நம்பர்-1’ இடத்தில் நீடிக்கிறது.

இதில் தோனி காய்ச்சால் காரணமாக விலகியாதாக சென்னை கேப்டன் ரெய்னா தெரிவித்தார். இதன் மூலம் கடந்த 2010 க்கு பின் சுமார் 9 ஆண்டுக்கு பிறகு தல தோனி இந்த சீசனில் தான் ஐபிஎல் போட்டியில் இரண்டாவது முறையாக பங்கேற்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#IPL 2019 #csk #m.s dhoni
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story