×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதல் திருமணம்! ஐந்து மாத கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு! செல்போனில் போலீசார் கண்ட அதிர்ச்சி வீடியோ!

5 month pregnant lady commits suicide

Advertisement

திருப்பத்தூர் பெரியகரம் அண்ணநகர் காலனியில் வசித்து வந்தவர் தீபா. 25 வயது நிறைந்த இவரது கணவர் ராகுல்.  ராகுல் தனியார் டிவி ஷோரூமில் வேலை பார்த்து வந்தபோது அதே ஷோரூமில் வேலைபார்த்து வந்த தீபாவை காதலித்து வந்துள்ளார். 

ஆனால் இருவரின் வீட்டிலும் அவர்களது காதலை ஏற்று கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் குடும்பத்தினரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து இருவரும் திருப்பத்தூர் சேர்மன் ரங்கநாதன் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். இந்நிலையில் தீபா தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் தீபா திடீரென தனது உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றி எரித்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த  அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர்  பரிதாபமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் தீபாவின் செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் அவர் தன் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ பற்ற வைப்பதை வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் எதற்காக அவர் தற்கொலை செய்ததை வீடியோ எடுத்து வைத்துள்ளார். தற்கொலைக்கான காரணம் என்ன என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#suicide #pregnant lady
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story