×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகளை காதலித்த 17 வயது சிறுவன்.. கொடூரமாக கொலை செய்து கிணற்றில் வீசிய தந்தை.. அதிர்ச்சி..!

மகளை காதலித்த 17 வயது சிறுவன்.. கொடூரமாக கொலை செய்து கிணற்றில் வீசிய தந்தை.. அதிர்ச்சி..!

Advertisement

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூர் காலனியில் வசித்து வருபவர் இளைய பெருமாள். இவருக்கு கோகுலகிருஷ்ணன் என்ற மகன் ஒருவர் உள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குறிஞ்சிக்குடி கிராமத்தில் உள்ள தரைக்கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இதனை அவ்வழியாக சென்ற மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பரிசோதனையின் முடிவில் சிறுவனின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து யாரேனும் சிறுவனை அடித்து கொலை செய்து கிணற்றில் வீசி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கோகுலகிருஷ்ணனின் நண்பரான வாசுதேவன் என்பவர் சம்பவத்தன்று அவரை வெளியே அழைத்து சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் வாசுதேவனை பிடித்து விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது கோகுலகிருஷ்ணன் அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரின் மகளை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனை சரவணன் கண்டித்தும் கோகுலகிருஷ்ணன் தனது காதலை கைவிடாமல் இருந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் மற்றும் அவரது மகன்கள் நவீன் மற்றும் சூர்யா ஆகியோர் சேர்ந்து கோகுலகிருஷ்ணனை அடித்துக் கொலை செய்து அங்கிருந்த கிணற்றில் வீசியது அம்பலமானது.

இதனையடுத்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Murder #Aquest arrested #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story