அட டிவி பார்த்தது ஒரு குத்தமா.. கண்டித்த தாய்... ஆத்திரத்தில் மாணவியின் விபரீத முடிவு..!
அட டிவி பார்த்தது ஒரு குத்தமா.. கண்டித்த தாய்... ஆத்திரத்தில் மாணவியின் விபரீத முடிவு..!
தர்மபுரி நந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவருக்கு தனுஸ்ரீ என்ற மகள் உள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். தனுஸ்ரீக்கு அடிக்கடி டிவி பார்க்கும் பழக்கம் இருந்ததால் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.
இதனால் தனுஸ்ரீயின் தாயார் அவரை படிப்பில் கவனம் செலுத்துமாறு கண்டித்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த தனுஸ்ரீ மீண்டும் டிவி பார்த்து கொண்டிருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனுஸ்ரீயின் தாய் அவரை படிப்பில் கவனம் செலுத்துமாறு திட்டி உள்ளார்.
இதனால் மனமடைந்த தனுஸ்ரீ வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தனுஸ்ரீயின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.