×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கர்ப்பமாக்கிவிட்டு கழட்டிவிட்ட காதலன்.. காவல் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்.!

கர்ப்பமாக்கிவிட்டு கழட்டிவிட்ட காதலன்.. காவல் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்.!

Advertisement

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதியை சேர்ந்தவர் ரோஜா. இவர் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த பாண்டிதுரை என்ற இளைஞரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டார் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து ரோஜாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்த பாண்டித்துரை அவருடன் பலமுறை உடலுறவு கொண்டுள்ளார். இதில் ரோஜா 3 மாத கர்ப்பமாகியுள்ளார்.

இந்த நிலையில் பாண்டித்துரை உன்னை எனது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என கூறி கழட்டி விட பிளான் போட்டு உள்ளார். இதனையடுத்து ரோஜா காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் திருமணம் செய்தால் மட்டுமே பெண் வீட்டாரின் புகாரை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பாண்டித்துரையின் வீட்டார் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து காவல் நிலைய வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் பெண் வீட்டார் புகாரை வாபஸ் பெற்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kanchipuram #thiruvannamalai #Boyfriend cheat girlfriend #Sethupatu #marriage
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story