×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பூப்படையாத 14, 15, 16, 17 வயது சிறுமிகள் பாலியல் சித்ரவதை.. சென்னையில் விபச்சார கும்பல் அட்டகாசம்.. பகீர் தகவல்.!

பூப்படையாத 14, 15, 16, 17 வயது சிறுமிகள் பாலியல் சித்ரவதை.. சென்னையில் விபச்சார கும்பல் அட்டகாசம்.. பகீர் தகவல்.!

Advertisement

சென்னையில் திரிபுரா மாநிலத்தில் இருந்து 4 சிறுமிகளை கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பயங்கரம் நடந்துள்ளது. சிறுமிகள் உதவி கேட்டு காப்பாற்றப்பட்ட நிலையில், அவர்கள் அளித்த வாக்குமூலம் அதிர வைத்துள்ளது.

திரிபுரா மாநிலத்தில் உள்ள சிவஜெலா பகுதியை சேர்ந்தவர் சலீமா கதூன் (வயது 38). இவர் தனது கிராமத்தில் உள்ள சிறுமிகளை, நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று வேலை வாங்கி கொடுப்பதாக உள்ளூரில் வலம் வந்துள்ளார். இந்த கிராமத்தில் கணவரை பிரிந்து, கைக்குழந்தையுடன் வசித்து வரும் 17 வயது சிறுமியிடம் சலீமா ஆசை வார்த்தை கூறி, பெங்களூரில் உள்ள அழகு நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். 

இதனை உண்மை என நம்பிய 17 வயது சிறுமியும் பெங்களூர் வர சம்மதம் தெரிவித்த நிலையில், அதனைப்போல 16 வயது, 15 வயது, 14 வயதுடைய 3 சிறுமிகளிடமும் வேலை வாங்கி தருவதாக கூறி, மொத்தமாக 4 சிறுமிகளின் பெற்றோர் ரூ.13 ஆயிரம் முன்பணமாக பெற்றுக்கொண்டு மகள்களை வேலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் இரயிலில் பெங்களூர் வந்துள்ளனர்.

பெங்களூரில் சில நாட்கள் 4 சிறுமிகளும் தங்கியிருந்த நிலையில், சென்னையில் உள்ள அழகு நிபுணரிடம் பயிற்சி எடுத்தால் கூடுதல் வருமானம் வரும் என்று கூறி, கடந்த 17 ஆம் தேதி பெங்களூரில் இருந்து சென்னைக்கு 4 சிறுமிகளும் சலீமாவுடன் வந்துள்ளனர். கேளம்பாக்கம் படூருக்கு சிறுமிகளை அழைத்து சென்ற சலீமா, அலாவுதீன், மைதீன் மற்றும் அன்வர் உசேனிடம் சிறுமிகளை ஒப்படைத்துள்ளார். 

இவர்கள் மூவரும் சிறுமிகளிடம் கடுமையாக நடந்துகொண்ட நிலையில், எதற்காக இவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். மறுநாளில் 4 சிறுமிகளையும் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தவே, சிறுமிகள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, விபச்சாரத்தில் ஈடுபட மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அன்வர், அலாவுதீன், மைதீன் சிறுமிகளை சித்ரவதை செய்துள்ளனர். பாலியல் ரீதியாகவும் அவர்களை துன்புறுத்தி, 2 சிறுமிகள் ஒரு வீட்டிலும், மற்ற 2 சிறுமிகள் மற்றொரு வீட்டிலும் என தங்க வைத்துள்ளனர்.

சிறுமிகள் தப்பி சென்றுவிடக்கூடாது என அவர்களை ஆபாசமாக புகைப்படம், வீடியோ பதிவு செய்து, நீங்கள் தப்பி சென்றால் இவற்றை இணையத்தில் பரப்பிடுப்போம் என்றும் மிரட்டி இருக்கின்றனர். தினமும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி சித்ரவதை செய்ய, இரவில் பல பகுதிகளுக்கு அழைத்து சென்று பாலியல் தொழிலாளர்களாக ஈடுப்படுத்தி இருக்கின்றனர். குடியரசு தின இரவில் ஊரடங்கு அமலில் இருந்த போதும் கொடூரம் நடந்துள்ளது. 4 சிறுமிகள் நள்ளிரவில் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் அழைத்து செல்லப்படுவதை பார்த்த பார்த்த படூர் மக்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த கேளம்பாக்கம் காவல் துறையினர், வீட்டிற்குள் சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாய் கண்டுள்ளனர். ஆனால், அவர்கள் சிறுமிகளை மீட்காமல், விபச்சார கும்பலிடம் பணம் வாங்கி சென்றுள்ளனர். காவல் துறையினர் இருப்பிடம் வரை வந்துவிட்டதால் 3 பேர் கும்பல் சிறுமிகளை பெங்களூர் அனுப்ப முடிவு செய்துள்ளனர். அவர்களை கேளம்பாக்கத்தில் இருந்து பூக்கடை பகுதிக்கு அழைத்து வந்து விடுதியில் தங்க வைத்து பாலியல் சித்ரவதை தொடர்ந்துள்ளது. 

தாங்கள் கடத்தி செல்லப்படுவதை உணர்ந்த சிறுமிகள் செய்வதறியாது திகைக்கவே, சிறுமிகளை அழைத்து செல்ல பெங்களூரில் இருந்து பெண்ணொருவர் வந்துள்ளார். அப்போது, சிறுமிகளுக்கும் - பெண்ணுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடக்கவே, 4 சிறுமிகளின் ஒரு சிறுமி தப்பி சென்றுள்ளார். மேலும், விடுதிக்கு வெளியே இருந்த காவல் அதிகாரியை அணுகி காப்பாற்றக்கூறி இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக பூக்கடை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் 4 சிறுமிகளையும் மீட்டுள்ளனர். 

காவல் துறையினரை கண்டதும் சிறுமிகளை பெங்களூர் அழைத்து செல்ல வந்த பெண் தப்பி சென்றுவிட, சிறுமிகளிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். சென்னையை சேர்ந்த சிலர் 4 சிறுமிகளையும் பணம் கொடுத்து வாங்கிய நிலையில், தொகையை சம்பாதிக்க சித்ரவதை செய்துள்ளனர். மேலும், நாளொன்றுக்கு ஒவ்வொரு சிறுமியும் ரூ.50 ஆயிரம் பணம் சம்பாதித்து தர வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்து பாலியல் சித்ரவதை செய்துள்ளனர். இரவு 7 மணிமுதல் மறுநாள் அதிகாலை வரை சிறுமிகள் பாலியல் தொழிலாளர்களாக உபயோகம் செய்யப்பட்டு வந்துள்ளனர்.

ஒரு நாளில் தலா 6 பேருடன் ஒவ்வொரு சிறுமியும் உல்லாசமாக இருக்க வேண்டும் என சித்ரவதை செய்து கொடுமை படுத்தியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த குழந்தைகள் நல அதிகாரிகள், சிறுமியிடம் விசாரணை செய்தபோது ஆபாச படம் எடுத்து மிரட்டி கொடுமைப்படுத்தியதும் அம்பலமானது. மேலும், 4 சிறுமிகளின் 14 வயதுடைய சிறுமி பருவமடைதலை கூட இன்னும் எட்டவில்லை. சிறுமிகளை கடத்தி வந்த சலீமா, விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி சித்ரவதை செய்த அன்வர், மைதீன், அலாவுதீன் ஆகிய 4 பேருக்கு அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #child #prostitution #Minor Girl #sexual abuse #police #Investigation #bangalore
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story