×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

31 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் அடித்து நொறுக்கப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

31 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் அடித்து நொறுக்கப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

Advertisement

 

தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. 

ஆரஞ்சு எச்சரிக்கை

இந்நிலையில், இரவு 7 மணி வரையில் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அடுத்த 3 மணிநேரத்திற்கு சென்னை & புறநகர் பகுதிகளில் மழைக்கான அறிவிப்பு; விபரம் இதோ.!

மஞ்சள் எச்சரிக்கை

அதேபோல, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்ககான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேற்கூறிய அனைத்து மாவட்டங்களிலும் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சூறைக்காற்றுடன் சென்னையை புரட்டியெடுத்த கனமழை.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rain #weather update #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story