×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

20 தீட்சகர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட விசிக நிர்வாகி; சிதம்பரத்தில் பகீர்.. போராட்டம்.!

20 தீட்சகர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட விசிக நிர்வாகி; சிதம்பரத்தில் பகீர்.. போராட்டம்.!

Advertisement

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில், ஆயிரம் கால் மண்டபம் பகுதியில் நேற்று தீட்சகர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. 

அப்போது, அங்கு எதற்ச்சையாக சென்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி இளையராஜா, தீட்சகர்கள் விளையாடுவதை வீடியோ எடுத்ததாக தெரியவருகிறது. 

இதையும் படிங்க: டாஸ்மாக் சரக்கில் செத்துக்கிடந்த பல்லி.. கட்டிங் அடித்து உயிர் பயத்தில் அலறிய நபர்.. திட்டக்குடியில் சம்பவம்.!

மருத்துவமனையில் அனுமதி

இதனைக்கண்ட அவர்கள், செல்போனை பிடுங்கி சுமார் 20 பேராக சேர்த்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மயங்கிய விசிக நிர்வாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். 

இந்த விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சிதம்பரம் காவல் நிலையம் முன்பு விசிகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

ஏற்கனவே கோவில் வளாகத்தில் வீடியோ எடுக்கும் நபர்களின் செல்போன்கள் பல உடைக்கப்பட்டதாகவும், பிடுங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்து இருக்கின்றன. இதனிடையே, இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

 

இதையும் படிங்க: பணியின்போதே சோகம்.. கட்டிட தொழிலாளி மயங்கி விழுந்து மரணம்..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Cuddalore #Chidambaram #Vck #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story