×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவியின் தங்கையுடன் திருமணம்.. கள்ளத்தொடர்பு விவகாரத்தில் படுபயங்கரம்; சரமாரியாக வெட்டிக்கொலை.! 

மனைவியின் தங்கையுடன் திருமணம்.. கள்ளத்தொடர்பு விவகாரத்தில் படுபயங்கரம்; சரமாரியாக வெட்டிக்கொலை.! 

Advertisement

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர், சோனங்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் பழனிவேல். இவரின் மகன் ரமேஷ் (வயது 37). இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ரமேஷின் மனைவி இந்துமதி (வயது 35). தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், ரமேஷ் தனது மனைவியின் தந்தையான சூர்யா (வயது 33) என்பவரையும் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். 

வேறொருவருடன் கள்ளத்தொடர்பு

இதனிடையே, சூர்யா முதுநகர் பகுதியை சேர்ந்த ஒருவருடன் பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் விஷயம் ரமேஷுக்கு தெரியவந்துவிடவே, விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர் தனது மனைவியை கண்டித்து இருக்கிறார். இதனை கண்டுகொள்ளாத சூர்யா, தொடர்ந்து தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: தந்தையின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மகன் சிறையில் அடைப்பு; ஆத்திரத்தில் பல்லை உடைந்ததால் சோகம்.!

சரமாரியாக வெட்டிக்கொலை

இந்நிலையில், சம்பவத்தன்று சூர்யாவிடம் அன்பாக சொல்லிப்பார்த்த ரமேஷ், வாக்குவாதத்தில் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். பின் அங்கிருந்து தப்பியோடினார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த முதுநகர் காவல் துறையினர், சூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரமேஷுக்கு வலைவீசப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணின் கணவர் கொலை; ஊராட்சிமன்ற தலைவர் கைது.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Affair #wife killed #Cuddalore #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story