×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பட்டப்பகலில் ஆசிரியை கொலை முயற்சி... நடுரோட்டில் மாணவன் பரபரப்பு செயல்.. பேரதிர்ச்சி சம்பவம்.! 

பட்டப்பகலில் ஆசிரியை கொலை முயற்சி... நடுரோட்டில் மாணவன் பரபரப்பு செயல்.. பேரதிர்ச்சி சம்பவம்.! 

Advertisement

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவரை, பள்ளி சீருடையணிந்த மாணவன் கொலை செய்ய முயற்சித்த பேரதிர்ச்சி சம்பவம் விருத்தாசலத்தில் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம், காட்டுக்கூடலூர் சாலையில் உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சரவணகுமார். இவரின் மனைவி ரேகா (வயது 42). ரேகா விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றுகிறார். இவரின் வீடு பள்ளிக்கூடம் அருகேயே இருப்பதால், தினமும் பள்ளிக்கு நடந்தே வந்து செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. 

நேற்று காலை வழக்கம்போல பள்ளிக்கு வந்த ஆசிரியை ரேகா, மதிய உணவு இடைவேளையின் போது சாப்பிட வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு மீண்டும் நடந்து வந்துகொண்டு இருந்த நிலையில், அப்பகுதியில் பதுங்கியிருந்த பள்ளி சீருடையணிந்த மாணவன், நடுரோட்டில் ஆசிரியையின் தலையில் பேனா கத்தியால் வெட்டியுள்ளார். 

இதனால் காயமடைந்த ரேகா கூச்சலிடவே, பதறிப்போன அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர். இதனைக்கண்ட மாணவனும் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், ரேகாவை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

ஆசிரியைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விஷயம் தொடர்பாக விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Cuddalore #virudhachalam #woman #teacher #murder attempt #police #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story