×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காய்ச்சலால் மூளைச்சாவடைந்த 11 வயது சிறுவன்; உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்.. திண்டுக்கலில் சோகம்.!

காய்ச்சலால் மூளைச்சாவடைந்த 11 வயது சிறுவன்; உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்.. திண்டுக்கலில் சோகம்.!

Advertisement

திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் சிறுவன் கிஷோர் (வயது 11). சிறுவனின் தந்தை பழனிச்சாமி. இவர் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார். 

சிறுவன் கிஷோர் அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், கடுமையான காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்ட கிஷோர், திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். 

11 வயது சிறுவன் மூளைச்சாவு

அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி மூளை சாவடைந்தார். இதனையடுத்து, பெற்றோர் தங்களின் மகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்தனர். 

இதையும் படிங்க: போதையில் மனைவியை கொல்ல முயன்ற கணவர்; இறுதியில் பரிதாப பலி.. குடிகாரனால் பத்ரகாளியான பெண்.! 

இதனையடுத்து, கிஷோரின் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு, அது வேண்டிய நபர்களுக்கு பொருத்தப்பட உள்ளது. 11 வயதில் தங்களது மகன் இறந்தாலும், அவர் பலரின் உடலில் வாழ்வதாக பெற்றோர் கண்ணீர் மல்க மகனுக்கு பிரியா விடை அளித்தனர்.

இதையும் படிங்க: விழுப்புரம்: காதலர் நாளிதழில் வித்தியாசமான திருமண வரவேற்பு; கவனத்தை ஈர்த்த இளைஞர்களின் போஸ்டர்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dindigul #tamilnadu #organ donate
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story