×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகளை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த தந்தை; 2 மாத தலைமறைவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளிவைத்த போலீஸ்.!

மகளை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த தந்தை; 2 மாத தலைமறைவு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளிவைத்த போலீஸ்.!

Advertisement

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பகுதியில் வசித்து வருபவர் பாரதி. இவர் கணவரை இழந்து மகளுடன் வசித்து வந்த பெண்மணி ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். 

தம்பதிகள் இருவரும் திருமணத்திற்கு பின் புதிய வாழ்க்கையை தொடங்கிய நிலையில், தனது மனைவிக்கு முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தைக்கு, பாரதி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிய வருகிறது. 

சிறுமி கர்ப்பம், மாயம்

 

இதனால் சிறுமி கர்ப்பமாகி இருக்கிறார். இதனிடையே, சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க பாரதி அவரை கடத்திச் சென்றுள்ளார். இதனால் பதறிப்போன சிறுமியின் தாய் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னை: 13 வயது சிறுமி பலாத்காரம்; காதல் பெயரை சொல்லி இளைஞர் பகீர் செயல்.!

தலைமறைவு

இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தலைமறைவானவர்களை தேடி வந்தனர். சமீபத்தில் திருப்பூர் பகுதியில் சிறுமியுடன் இவர் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. 

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பாரதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகள் பலாத்காரம் விவகாரம்; தேசிய பெண்கள் ஆணையம் உத்தரவு.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rape #Girl Missing Case #Bhavani Sagar #erode #Step Father
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story