×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

24 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம்.. இன்ஸ்டா பழக்கம் செய்த கொடூரத்தால் கதறும் கல்லூரி மாணவி.!

24 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம்.. இன்ஸ்டா பழக்கம் செய்த கொடூரத்தால் கதறும் கல்லூரி மாணவி.!

Advertisement

கல்லூரி மாணவியை மிரட்டி கற்பழித்த இளைஞன் செய்த காரியம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் 24 வயது கல்லூரி மாணவி, கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், "நான் மும்பையில் இருக்கும் தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ படிக்கிறேன். கடந்த 2020-ல் சென்னையில் நடந்த மாராத்தானில் கலந்துகொள்ள சென்றபோது, கோயம்புத்தூர் சரவணம்பட்டியை சார்ந்த ராஜ்குமார் (வயது 31) என்பவர் அறிமுகம் ஆனார். 

நாங்கள் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், அவர் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். நான் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்தவன் எனக்கே தெரியாமல் எடுத்து வைத்திருந்த ஆபாச படத்தை அனுப்பி ஆசைக்கு இணங்க வற்புறுத்தினான்.

அவனின் மிரட்டலுக்கு பயந்து சென்னையில் தங்கியிருந்த குடியிருப்புக்கு சென்ற நிலையில், அங்கு வைத்து அவன் என்னை பாலியல் பலாத்காரம் செய்தான். அதனைத்தொடர்ந்து குன்றத்தூரில் உள்ள வீட்டில் வைத்தும் பலாத்காரம் செய்து, என்னை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து வைத்துக்கொண்டார். அதனை காண்பித்து அனுதினமும் என்னை மிரட்டி பலாத்காரம் செய்கிறான். அவனின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#erode #tamilnadu #college girl #sexual abuse #Instagram
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story