×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

21 வயது இளம்பெண்ணை பாலியல் தொழிலில் தள்ளிய கிழவி; ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்.!

21 வயது இளம்பெண்ணை பாலியல் தொழிலில் தள்ளிய கிழவி; ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்.!

Advertisement


ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம், கரட்டடிபாளையம் கிராமத்தில் இருக்கும் வீட்டில் பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: #JustIN: கோவையை மையப்படுத்தி வானில் ரசாயனங்கள் தெளிக்கப்படுகிறதா? - பதறவைக்கும் தகவலை கூறும் நபர்.. நிலவரம் என்ன?..!

இதனையடுத்து, அதிகாரிகள் ரகசிய ஆய்வு மேற்கொண்டு, அதிரடியாக வீட்டிற்குள் சென்று சோதனை செய்தபோது, ஆணொருவர் தப்பி ஓடி இருக்கிறார். பின் வீட்டில் நடந்த ஆய்வில் 21 வயது இளம்பெண் மீட்கப்பட்டார். 

பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட இளம்பெண்

அவரிடம் நடைபெற்ற விசாரணையில், பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 60 வயதுடைய வடிவு என்ற பெண்மணி, தன்னை ஆசைவார்த்தை கூறி பாலியல் தொழிலில் தள்ளியதாக கூறி அதிர்ச்சி தந்துள்ளார். 

இதையும் படிங்க: கால்பந்து விளையாடியவாறு பறிபோன உயிர்; ஈரோட்டில் நண்பர்களின் கண்முன் நடந்த சோகம்.!

இதனையடுத்து, இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வடிவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். 

வடிவு இதுபோல வேறு ஏதேனும் பெண்களை விபச்சாரத்தில் தள்ளினாரா? விபசார கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என பல கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: நடுரோட்டில் பழுதான அரசு பேருந்து.. தள்ளிக்கொண்டு போன பயணிகள்.! அவல நிலை.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#prostitution #erode #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story