×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என் சாவுக்கு இவர் தான் காரணம்... திருமணமான இரண்டு வாரத்தில்... உருக்கமான வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை...!!

என் சாவுக்கு இவர் தான் காரணம்... திருமணமான இரண்டு வாரத்தில்... உருக்கமான வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை...!!

Advertisement

கரூரில் இளம்பெண் ஒருவர் திருமணமான இரண்டு வாரத்திற்குள் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் தாந்தோணி மலை பாரதிதாசன் நகரில் வசிப்பவர் ராகப்பிரியா (27). இவர் பொரணியில் இருக்கும் அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வருகிறார். 

இந்நிலையில் சுதர்சன் என்பவருக்கும் ராகப்பிரியாவிற்கும் இரண்டு வாரங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் சுதர்சனுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது ராகப்பிரியாவுக்கு தெரிய வந்தது.

இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ராகப் பிரியா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த தாந்தோணி மலை காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று ராக பிரியாவின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் நடந்து இரண்டு வாரங்களே ஆன நிலையில் புது பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதால், குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தனது தற்கொலைக்கு கணவர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, உருக்கமான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ராகப்பிரியா. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மேலும் இந்த சம்பவம் குறித்து கரூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்து கொண்ட ராகப் பிரியாவின் கணவர் சுதர்சனை, தாந்தோணி மலை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #Karur #Woman commits suicide #In two weeks of marriage
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story