×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மருமகளை மனைவியாக்க Ex. ஆர்மி ஸ்கெட்ச்; கணவனுக்கு நேர்ந்த படுபயங்கரம்.. நடுநடுங்க வைக்கும் கொலை.!

மருமகளை மனைவியாக்க Ex. ஆர்மி ஸ்கெட்ச்; கணவனுக்கு நேர்ந்த படுபயங்கரம்.. நடுநடுங்க வைக்கும் கொலை.!

Advertisement

குழந்தைகள் வளர்ந்துவிட்டதால் மாமனாருடன் கொண்ட தொடர்பை மருமகள் கைவிட, மருமகளை கட்டாயம் அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெரியப்பா மகனை கொலை செய்த சம்பவம் பர்கூரை அதிரவைத்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர், ஜி. நாகமங்கலம் கிராமத்தில் உள்ள கிணற்றில், தீயணைப்பு வீரர்களால் இருசக்கர வாகனம் மீட்கப்பட்டது. 6 நாட்களாக மாயமானதாக கூறப்பட்ட நபர், கிணற்றில் இருந்தும் சடலமாக மீட்கப்பட்டார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டது நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பதும், அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொடூரமாக கொல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது. மணிகண்டனின் மனைவி வள்ளியம்மாள். தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஆட்டோ ஓட்டுநராக மணிகண்டனும், வள்ளியம்மாள் உணவகம் ஒன்றில் கூலித் தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்துள்ளார். 

இதையும் படிங்க: தென்காசி: கள்ளகாதலியுடன் சேர்த்து செய்யக்கூடாத வேலை; தலைமை காவலருக்கு நேர்ந்த சோகம்..!

மணிகண்டன் மாயம்

இதனிடையே, சம்பவத்தன்று வள்ளியம்மாளுக்கு உடல்நலம் குன்றியதால், மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். மனைவியை பார்த்துவிட்டு மணிகண்டன் வீடு திரும்பிய சூழலில், அவர் வரவில்லை. மணிகண்டன் மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பெரியப்பாவின் அதிர்ச்சி செயல்

புகாரை ஏற்று விசாரணை நடத்திய அதிகாரிகள், மருத்துவமனையில் இருந்து மணிகண்டன் புறப்பட்ட காட்சிகளை கண்காணித்தனர். அவருடன் அதே பகுதியில் வசித்து வரும் பழனிக்குமார், ராஜ் குமார் பயணித்தது உறுதியானது. இருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் மணிகண்டனின் பெரியப்பா நாகராஜ் கொலைக்கு மூலகாரணமாக செயல்பட்டதும் தெரியவந்தது.

தனிமையில் உல்லாசம்

அதாவது, நாகராஜ் முன்னாள் இராணுவ வீரர் ஆவார். தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில், நாகராஜ் - வள்ளியம்மாள் இடையே ஏற்பட்ட பழக்கம், உறவுகளை தாண்டிய கள்ளக்காதலை ஏற்படுத்தி இருக்கிறது. இருவரும் பல ஆண்டுகளாக தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

பணத்தை வாரி இறைத்த எக்ஸ் ஆர்மி 

ரகசிய காதல் ஜோடியில் நாகராஜ் வள்ளியம்மாளுக்கு அடிக்கடி பணம் கொடுத்து வந்துள்ளார். இவ்வாறாக ரூ.17 இலட்சம் மதிப்புள்ள வீடு ஒன்றையும் நாகராஜ் கட்டிக்கொடுத்துள்ளார். வள்ளியம்மாள் குடும்பத்தை தனது குடும்பமாகவே கவனித்து வந்ததாகவும் தெரியவருகிறது. 

வேறு ஆண்களுடன் பழகியதை கணவர் தட்டிக்கேட்கவில்லையாம்

குழந்தைகள் அனைவரும் வளர்ந்துவிட்ட காரணத்தால் வள்ளியம்மாள் முறையற்ற உறவில் இருந்து விலக தொடங்கி இருக்கிறார். இதனை ஏற்றுக் கொள்ள மனமில்லா நாகராஜ், சில ஆண்களுடன் நெருங்கி பழகியுள்ளார். இதனால் நாகராஜ் ஆத்திரமடைந்துள்ளார். பிற ஆண்களுடன் வள்ளியம்மாள் பழகுவதை எதற்காக நீ தட்டிக்கேட்கவில்லை என மணிகண்டனை கண்டித்துள்ளார். 

கேடுகெட்ட பெரியப்பனை வார்த்தையால் கிழித்துநட்டிய மகன் 

வள்ளியம்மாள் - நாகராஜ் உறவை அறிந்திருந்த மணிகண்டன், தனது பெரியப்பாவை வார்த்தைகளால் வறுத்தெடுத்து இருக்கிறார். இந்த விஷயத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, மணிகண்டனின் வார்த்தையால் ஆத்திரமடைந்தவர் பழனி, ராஜ் ஆகியோருக்கு ரூ.1 இலட்சம் பணம் கொடுத்து மணிகண்டனை தீர்த்துக்கட்ட உத்தரவிட்டுள்ளார். 

மூவர் கைது

மனைவியை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தவரை தோப்புக்கு அழைத்து சென்றவர்கள், மதுவை ஊற்றிவிட்டு கிணற்றுக்குள் பாம்பு தெரிவித்தாக கூறி மணிகண்டனை உள்ளே தள்ளிவிட்டுள்ளனர். தடயத்தை அழிக்க மணிகண்டனின் இருசக்கர வாகனமும் கிணற்றுக்குள் தள்ளி விடப்பட்டுள்ளது. விசாரணையில் உண்மையை அறிந்த அதிகாரிகள் நாகராஜ், ராஜ்குமார், பழனிக்குமார் ஆகியோரை கைது செய்தனர். 

இதையும் படிங்க: முதல் கள்ளகாதலனின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இரண்டாவது கள்ளக்காதலன்; எஸ்கேப் ஆன டோலி.. மதுரையில் பகீர்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Affair #Krishnagiri #tamilnadu #Husband Wife
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story