×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மதுரை: சிமெண்ட் லாரி - கார் மோதி பயங்கர விபத்து; காவல் உதவி ஆய்வளர் பரிதாப மரணம்.!

மதுரை: சிமெண்ட் லாரி - கார் மோதி பயங்கர விபத்து; காவல் உதவி ஆய்வளர் பரிதாப மரணம்.!

Advertisement

 

பணியை முடித்துக்கொண்டு வீட்டிற்கு திரும்ப காவலர் விபத்தில் மரணம் அடைந்தார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள மாத்தூர், அப்பன் திருப்பதி பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார் (வயது 49). இவர் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பட்டாலியனில் உதவி காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். 

இதையும் படிங்க: 100ல் பயணம்.. 108 வந்தும் பிழைக்காத உயிர்.. 21 வயது இளைஞனுக்கு எமனாகிப்போன ரீல்ஸ் மோகம்.! 

நேற்று வழக்கம்போல பணிக்கு வந்தவர், பின் பணியை முடித்துக்கொண்டு காரில் மதுரையில் உள்ள வீட்டிற்கு செல்ல இராஜபாளையம் - மதுரை சாலையில் பயணம் செய்துள்ளார். 

காவலர் பலி

இவரின் கார் எம். சுப்பலாபுரம் பகுதியில் வந்தபோது, சிமெண்ட் பாரம் ஏற்றிவந்த லாரி, எதிர்பாராத விதமாக காரின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த காவலர், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உதவி ஆய்வாளர் ஜெயக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

இதையும் படிங்க: #Breaking: செப்டிக் டேங்க் லாரி மோதி கல்லூரி மாணவி பலி; சென்னையில் சோகம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #madurai #tamilnadu #Rajapalayam #Lorry Car Crash
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story