×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#JustIN: காதல் விவகாரம்.. உயிரே போச்சு.. 17 வயது சிறுமி எரித்துக்கொலை.!

#JustIN: காதல் விவகாரம்.. உயிரே போச்சு.. 17 வயது சிறுமி எரித்துக்கொலை.!

Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் வசித்து வருm பெண்மணி காளியம்மாள். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பல ஆண்டுகளாக பரமக்குடியில் வசித்து வந்துள்ளார். அப்போது, காளியம்மாள் மகளும், அதே பகுதியை சேர்ந்த இளைஞருடம் பழகி வந்துள்ளனர். 

பாட்டி வீட்டில் சிறுமி

கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இதனிடையே, காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்து, அவர்கள் சிறுமியை கண்டித்தனர். மேலும், சிறுமி அவரின் பாட்டி ஊரான எட்டயபுரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காதலருடன் பேசவில்லை. 

எரித்துக்கொலை

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் காதலர் சந்தோஷ், தனது நண்பரான முத்தையாவுடன் எட்டயபுரம் சென்றார். அங்கு சிறுமிக்கு காதலிக்க சொல்லி பேச்சுவார்த்தை நடத்த, சிறுமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதில் ஆவேசமான சந்தோஷ், சிறுமியின் உடலில் மண்ணெணெய் ஊற்றி தீ வைத்தார். 

இதையும் படிங்க: மீசை முளைக்காத வயதில் பப்பி லவ்.. பேசமறுத்த சிறுமியை மண்ணெணெய் ஊற்றி எரித்த எக்ஸ்.. தூத்துக்குடியில் திடுக் சம்பவம்.!

காவல்துறை விசாரணை

இந்த துயரத்தில் 65 விழுக்காடு தீக்காயத்துடன் படுகாயமடைந்த சிறுமி, எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமியின் மரணத்தைத்தொடர்ந்து, அவரது காதலர் சந்தோஷ், நண்பர் முத்தையா மீது பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: தூத்துக்குடி: சொத்து தகராறில் பயங்கரம்; முதியவர் அடித்தே கொலை!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thoothukudi #tamilnadu #Murder #Love #தூத்துக்குடி #காதல் #கொலை #எரித்துக்கொலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story