×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆரணி அரசு மருத்துவமனை அலட்சியத்தால் பறிபோன உயிர்.. 8 மாத கைக்குழந்தை, மனைவி பரிதவிப்பு.!

ஆரணி அரசு மருத்துவமனை அலட்சியத்தால் பறிபோன உயிர்.. 8 மாத கைக்குழந்தை, மனைவி பரிதவிப்பு.!

Advertisement


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் வசித்து வருபவர் சூர்யா (வயது 30). இவர் பழ வியாபாரியாக வேலை பார்த்து வருகிறார். சூர்யாவின் மனைவி ஜீவிதா (வயது 27). 

தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவருக்கும் மித்ரா என்ற 8 மாத கைக்குழந்தை இருக்கிறது. நேற்று முந்தினம் இரவு நேரத்தில், திடீரென சூர்யாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. 

நெஞ்சு வலி:
இதனால் அவரை உடனடியாக மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு பணியில் இருந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள், இசிஜி எனப்படும் மருத்துவ சோதனை செய்யவில்லை.

இதையும் படிங்க: கிரிவலத்தில் நடந்த சோகம்; வழிதவறிய பெண் நெஞ்சு வலியால் மரணம்.!

மருத்துவர்கள் அலட்சியம்:
சாதாரண சோதனை செய்துவிட்டு, ஒன்றும் இல்லை வீட்டிற்கு செல்லலாம் என கூறி இருக்கின்றனர். இதனால் அதிருப்தியடைந்த உறவினர்கள் வாக்குவாதம் செய்து, சூர்யாவை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு நடத்த சோதனையில் சூர்யா வரும் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. ஆரணி மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் சூர்யா உயிரிழந்துவிட்டார் என உறவினர்கள் குற்றம் சுமத்தி, கண்ணீருடன் தங்களின் வேதனையை வெளிப்படுத்தினர். 

8 மாத கைக்குழந்தையுடன் மனைவி தவித்தது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

 

இதையும் படிங்க: இன்ஸ்ட்டா காதலால் அதிர்ச்சி.. 13 வயது சிறுமி கர்ப்பம்.. 22 வயது நபர் தலைமறைவு.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#heart attack #Tiruvannamalai #Arani #திருவண்ணாமலை #நெஞ்சு வலி #மரணம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story