தோசை சாப்பிட்ட லாரி ஓட்டுநர் வாயில் நுரைதள்ளி மரணம்; தாய், காதலியின் சதிவலை.. பகீர் தந்த வாக்குமூலம்.!
தோசை சாப்பிட்ட லாரி ஓட்டுநர் வாயில் நுரைதள்ளி மரணம்; தாய், காதலியின் சதிவலை.. பகீர் தந்த வாக்குமூலம்.!

போதைக்கு அடிமையான மகனை, மகனின் செயல்பாடுகளால் வெறுப்படைந்த தாய், மகனின் காதலி உதவியுடன் போட்டுத்தள்ளிய சம்பவம் வளவனூரில் நடந்துள்ளது. போதை பாதை அதனை குடிப்பவனை மட்டுமல்லாது, பெற்றெடுத்த பாவத்திற்கும், காதலித்த பாவத்திற்கும் இருவரை கொலை செய்ய தூண்டி, அவர்களின் வாழ்க்கையையும் சீரழித்த சோகம் கலங்கவைத்துள்ளது...
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர், சீனிவாசபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் விஸ்வலிங்கம் (வயது 29). இவர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜனவரி 17ம் தேதி இவர் வீட்டில் சடலமாக கிடந்தார்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த வாவனூர் காவல்துறையினர், விஸ்வலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவரின் உடலில் இரத்தக்காயம் இருந்ததால், அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அமைச்சர் மீது சேறு வீசப்பட்ட விவகாரம்; சேறு வீசிய குடும்பத்தை தேடித்தேடி ரவுண்டு கட்டி கைது செய்த காவல்துறை.!
மர்ம மரணம்
இதனால் விஸ்வலிங்கத்தின் மரணத்தை மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், விஸ்வலிங்கத்தின் தாய் முனியம்மாள், அவருடன் தற்போது குடித்தனம் நடத்தி வந்த காதலி செல்வி ஆகியோரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணையை முன்னெடுத்தனர்.
விசாரணையில் விஸ்வலிங்கம் கொலை செய்யப்பட்டதான திடுக்கிடும் வாக்குமூலம் வெளியானது. அதாவது, மதுபோதைக்கு அடிமையான விஸ்வலிங்கம், தனது காதலி மற்றும் தாயிடம் அவ்வப்போது தகராறு செய்து தாக்குதல் நடத்துவதை தொடர்ந்து வந்துள்ளார். இந்த தொந்தரவை இவர்கள் பொறுக்க இயலவில்லை.
தோசை மாவில் ட்விஸ்ட்
இதனையடுத்து இருவரும் சேர்ந்து விஸ்வலிங்கத்தை கொலை செய்திடலாம் என முடிவெடுத்து, பூச்சிக்கொல்லி மருந்தை தோசை மாவில் கலந்து, தோசை சுட்டு கொடுத்துள்ளனர். இதுதெரியாமல் ஆசையாக தோசை சாப்பிட்டவர் வாயில் நுரைதள்ளி உயிரிழந்தார்.
இவர்களின் கொலை சம்பவத்திற்கு முன்னதாக விஸ்வலிங்கம், அவரின் உறவினர்கள் சிலருக்கு இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இதனால் அவர்கள் கொலையாளிகள் என சித்தரிக்க உடலில் சில வெட்டுக்காயமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் துருவித்துருவி நடத்திய விசாரணையில் தாய், காதலி உண்மையை ஒப்புக்கொண்டனர்.
விசாரணைக்கு பின் உண்மையை அறிந்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ரிப்பனில் இரத்தக்கறை.. இறந்த குழந்தையின் உடலை வைத்து நாடகம்?.! சிக்கிய புதிய சிசிடிவி காட்சி.!!