×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஓரினசேர்க்கை காட்சிகளை வீடியோ எடுத்தால் நடந்த பயங்கரம்; நண்பன் கொடூர கொலை.. மதுரையில் பயங்கரம்.!

ஓரினசேர்க்கை காட்சிகளை வீடியோ எடுத்தால் நடந்த பயங்கரம்; நண்பன் கொடூர கொலை.. மதுரையில் பயங்கரம்.!

Advertisement

 

மதுரை மாவட்டத்தில் உள்ள கடச்சனேந்தல் பகுதியில் வசித்து வருபவர் முகமது ரவுதின். இவரின் மகன் பைசல் அப்துல்லா (25). ஒத்தக்கடை பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் இவர் மாயமாகிய நிலையில், மாங்குளம் மலையடிவாரத்தில் அழுகிய நிலையில் அவரின் சடலம் மீட்கப்பட்டது.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அந்த காவல் துறையினர், அப்துல்லாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் குறித்து ஒத்தக்கடை காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மதுரை ஆத்திகுளம் பகுதியை சேர்ந்த பாலிடெக்னீக் கல்லூரி மாணவர் ஜெயசீலன் (வயது 20) என்பவருக்கு அப்துல்லாவின் கொலையி தொடர்பு இருப்பது உறுதியானது. 

அவரை கைது செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலமானது. ஜெயசீலன் - அப்துல்லா ஆகியோர் 6 மாதங்களுக்கு முன்பு வரையில் நண்பர்களாகவே இருந்து வந்துள்ளனர். இருவரும் இயற்கை காட்சிகளை படமாக்கி இருக்கின்றனர். இதனிடையே, இருவருக்குள்ளும் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த ஈர்ப்பு ஓரினசேர்கையாக மாற, இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை பைசல் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக ஜெயசீலனை மிரட்டி இருக்கிறார். ஆத்திரமடைந்த ஜெயசீலன் பாய்ச்சலை கொலை செய்து இருக்கிறார். 

அழகர் மலைக்கோவில் பகுதியில் இருந்து பைசலை தள்ளிவிட்டு கொலை செய்து, உடலை கத்தியால் குத்தி கொலை செய்து அங்கிருந்து தப்பி சென்று இருக்கிறார் என்பது தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் ஜெயசீலன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#madurai #tamilnadu #death
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story