×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருவிழா பாதுகாப்பில் பெண் போலீஸ்... அத்துமீற முயன்ற பிரபல அரசியல் கட்சியின் பிரமுகர்.! காவல்துறை கைது நடவடிக்கை.!

திருவிழா பாதுகாப்பில் பெண் போலீஸ்... அத்துமீற முயன்ற பிரபல அரசியல் கட்சியின் பிரமுகர்.! காவல்துறை கைது நடவடிக்கை.!

Advertisement

சென்னை வளசரவாக்கம் பகுதியில்  கோவில் திருவிழாவின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசுக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வளசரவாக்கம் ராமாபுரம் பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதன் பாதுகாப்பு பணிக்காக பெண் போலீசார்  சென்றுள்ளனர். அதே பகுதியைச் சார்ந்த கண்ணன் என்பவர் அங்கு மெக்கானிக்  கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் பாதுகாப்புக்குச் சென்ற  பெண் போலீசிடம் இவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் போலீஸ் அளித்த புகாரின் பேரில்  கண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெண் போலீசிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. மேலும் அவர் அந்தப் பகுதியில் திமுக பிரமுகராக இருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #chennai #Crime #violence against woman #political person arrested
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story