×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சித்த மருத்துவர் ஊசி போட்டதால் முதியவர் பரிதாப பலி.!

சித்த மருத்துவர் ஊசி போட்டதால் முதியவர் பரிதாப பலி.!

Advertisement

சென்னை பூந்தமல்லி சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சித்த மருத்துவர் பெருமாள். இவர் அதே பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சித்த மருத்துவமனை நடத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்ற முதியவர் சிகிச்சைக்காக வந்துள்ளார்.

அப்போது முதியவருக்கு, சித்த மருத்துவர் பெருமாள் ஆங்கில மருத்துவமன ஊசி போட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஊசி போட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே ராஜேந்திரன் மருத்துவமனிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே சித்த மருத்துவம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை பார்த்த சித்த மருத்துவர் பெருமாளை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவருடைய மருத்துவமனையில் இருந்து ஆங்கில மருத்துவ ஊசிகள் மற்றும் மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sidha doctor #chennai #Poonamalle #Sennerkuppam #death
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story