×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் பெய்யப்போகும் பேய்மழை; மஞ்சள் & ஆரஞ்சு எச்சரிக்கை..!

#Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் பெய்யப்போகும் பேய்மழை; மஞ்சள் & ஆரஞ்சு எச்சரிக்கை..!

Advertisement

 

தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு அதிக கனமழைக்கான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. நேற்று முதலாகவே தமிழ்நாடு முழுவதும் பரவலான இடங்களில் திடீர் கனமழை மற்றும் சூறைக்காற்று மழை பெய்து வருகிறது.

17 மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை

இந்நிலையில், இன்று இரவு 7 மணிமுதல் 10 மணி வரையில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: #BigBreaking: 14 மாவட்டத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு வெளுத்து வாங்கப்போகும் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

13 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை

எஞ்சிய திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், புதுக்கோட்டை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு, இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

இதையும் படிங்க: வேலூர் மாவட்டத்தை குளிர்வித்த ஆலங்கட்டி மழை; மகிழ்ச்சியில் பொதுமக்கள்..! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#rain #weather update #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story