×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகமே சோகம்.. இரண்டு லாரிகளுக்கு நடுவே சிக்கி தம்பதி பரிதாப பலி; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் உள்ளே.!

தமிழகமே சோகம்.. இரண்டு லாரிகளுக்கு நடுவே சிக்கி தம்பதி பரிதாப பலி; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள் உள்ளே.!

Advertisement

 

லாரி பின் மிகக்குறுகிய தொலைவில் பயணம் செய்ய கூடாது, அப்படி நெருங்கிய தூரத்தில் பயணித்தால் பின்னால் வரும் வாகனத்தின் நிலையை உணர்ந்து சுதாரிப்புடன் செயல்பட வேண்டும் என்பதற்கான அதிர்ச்சி வீடியோ வெளியாகி தமிழகத்தை மட்டுமல்லாது காண்போரை பதறவைத்துள்ளது. 

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பகுதியில் வசித்து வரும் தம்பதிகள், சம்பவத்தன்று தங்களின் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தனர். அப்போது, தம்பதிகள் இருவரும் இரண்டு லாரிகளுக்கு பின்னால் நின்று கொண்டு இருந்தனர். 

அச்சமயம், இவர்களுக்கு பின்புறம் வந்த கனகர லாரி தம்பதிகளின் மீது மோதியது. இதனால் தம்பதிகள் முன்புறம் நின்ற லாரியின் பின்பக்கத்தில் மோதி நசுக்கப்பட்டனர். 

இந்த துயர சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே கணவன் - மனைவியாக இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் சேலம் அழகன் நகரை சேர்ந்த தம்பதி அழகராசன் - சூர்யா, தங்களின் குழந்தைகள் ஹிருத்திக், கிஷோர் ஆகியோருடன் சென்றபோது விபத்தில் சிக்கி பலியானது உறுதி செய்யப்பட்டது.

சாலை பயணங்களில் ஆபத்துகள் எப்போதும் ஏற்படும் என்பதால், நாம் விழிப்புடன் பயணிப்பது நமது உயிரை பாதுகாக்க உதவி செய்யும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Salem #mettur #tamilnadu #couple
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story