சென்னையில் பரபரப்பு... கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுகவினர் ஒட்டிய போஸ்டர்...!!!
சென்னையில் பரபரப்பு... கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுகவினர் ஒட்டிய போஸ்டர்...!!!

கவர்னருக்கும் ஆளும் கட்சிக்குனம் இடையேயான மோதல் உச்சத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று, 2023-ஆம் வருடத்திற்கான முதல் தமிழ்நாடு சட்டசபை கூட்டம், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி அவர்களின் உரையுடன் தொடங்கியது. அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையில் இருந்த பல வரிகளை கவர்னர் ஆர்.என்.ரவி வாசிக்கவில்லை.
மேலும், முதலமைச்சர் உரை வாசித்தபோது சட்டசபையில் இருந்து கவர்னர் பாதியிலேயே வெளியேறினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவர்னரின் இந்தகைய செயலுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள செம்மொழி பூங்கா, அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களில் #GetOutRavi என்ற வாசகத்துடன் திமுகவினர் பிரம்மாண்ட போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.