தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வேன் - கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. நண்பர்கள் 3 பேர் உடல் நசுங்கி மரணம்.!

வேன் - கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. நண்பர்கள் 3 பேர் உடல் நசுங்கி மரணம்.!

Thiruvallur Friends 3 Persons Died Accident Near Kanchipuram Advertisement

கார் - வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில், காரில் பயணித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

திருவள்ளூர் மாவட்டத்தில் பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் அரியலூரில் பணியாற்றி வருகிறார். சுந்தரமூர்த்தியும், அவரது நண்பர்களும் நேற்று இரவு பேரம்பாக்கம் செல்வதற்கு, காஞ்சிபுரம் நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தனர். 

அப்போது, வந்தவாசி சாலையில் இருக்கும் மானாம்பதி அருகே வருகையில், எதிரே வந்த வேனின் மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த சுந்தரமூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் என 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

kanchipuram

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பெருநகர் காவல் துறையினர், 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kanchipuram #tamilnadu #death #accident #police #car #van
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story