×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழக சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண உயர்வு: வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி..!!

தமிழக சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண உயர்வு: வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி..!!

Advertisement

தமிழகத்திலுள்ள 25 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன் படி, தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சில சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி (நாளை) முதல் மீதமுள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி தமிழகத்தில் அமைந்துள்ள 50 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் , 29 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.55 வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. குறிப்பாக பரனூர், வானகரம், செங்குன்றம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் மீதம் உள்ள 25 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதன் படி மதுரை, திண்டுக்கல், திருச்சி, மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, தூத்துக்குடி மற்றும் எலியார்பத்தி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் ஒருமுறை கட்டணம் ரூ.5 முதல் ரூ.45 வரையிலும், இருமுறை கட்டணம் ரூ.10 முதல் ரூ.65 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#toll fee #Toll Fee Hike #tamil nadu #Toll Booths #National Highways
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story