×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Rain Alert: அடுத்த 5 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் மழை; இன்று இங்கெல்லாம் கனமழை அறிவிப்பு.!

#Rain Alert: அடுத்த 5 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் மழை; இன்று இங்கெல்லாம் கனமழை அறிவிப்பு.!

Advertisement

சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி உட்பட பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "தமிழகப்பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 28-ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 29-ஆம் தேதி மற்றும் 30-ஆம் தேதியை பொருத்தமட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

31-ஆம் தேதியை பொருத்தமட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

1-ஆம் தேதியை பொருத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், ஈரோடு, மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியஸும் பதிவாகலாம். 

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். 

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 28-ஆம் தேதி முதல் 1-ஆம் தேதி வரை குமரிக்கடல் பகுதி, கேரளா - கர்நாடக கடலோர பகுதி, லட்சத்தீவு பகுதி, மாலத்தீவுகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வேகம்வரை வீசலாம். 

தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிகடல் பகுதி, மன்னார் வளைகுடா, அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். இதனால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #Rain alert #India
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story