தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி.. மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்துவதாக பரபரப்பு புகார்..!

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி.. மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்துவதாக பரபரப்பு புகார்..!

women-attempt-suicide-infront-of-ramanathapuram-collect Advertisement

மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்துவதாக பெண் ஒருவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம் அருகே கருப்ப குடும்பன் பச்சேரி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் வளர்மதி. இவர் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார்.

இவரை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்து மதத்திலிருந்து, கிறிஸ்துவ மதத்திற்கு மாறும்படி கிராமத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் கட்டாயப்படுத்துவதாகவும், தனது மகனையும் அடித்து துன்புறுத்துவதாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். 

ஆனால், ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், மனஉளைச்சல் அடைந்த வளர்மதி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணையுடன் சென்று தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

Women

அப்போது அலுவலகத்தில் பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் அவரை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வளர்மதி, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதை தொடர்ந்து, ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் சேகர் காவல்துறையினரை தொடர்புகொண்டு கேட்டுள்ளார்.

அதற்கு இது சம்மந்தமான புகார்கள் இதுவரை எங்களுக்கு எதுவும் வரவில்லை என்றும், தற்போது வந்துள்ளதால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Women #Attempt suicide #collector office #ramanathapuram
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story