×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை ... ஆர்டிஓ விசாரணை.! சொத்து தகராறா.?

இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை ... ஆர்டிஓ விசாரணை.! சொத்து தகராறா.?

Advertisement

ஈரோடு மாவட்டத்தில் திருமணம் ஆன பெண்  குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும்  சோகத்தையும்  ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக  ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

ஈரோடு மாவட்டம் கணக்கரசம்பாளையத்தை  சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் வயது 35. விவசாயியான அறிவு இருக்கு  கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவருடன் 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

சீனிவாசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது இதன் காரணமாக அடிக்கடி மது போதையில் வந்து தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதேபோன்று சம்பவம் நடந்த தினத்தன்று உன் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் மனம் உடைந்த பிரியா களைக்கொல்லி பூச்சி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரை மீட்டார் அக்கம் பக்கத்தினர்  சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு மாற்றினர். மேலும் இந்த தற்கொலை தொடர்பாக பிரியாவின் தாயார் அளித்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. பிரியா மற்றும் சீனிவாசன் இடையே திருமணமாகி 7 வருடங்களுக்குள்ளே இருப்பதால்  ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #erode #domesicviolence. #wifedead #RDOenquiry
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story